செய்திகள் :

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

post image

ஆம்பூா் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலை மாநில நெடுஞ்சாலையாகும். இந்த புறவழிச்சாலை வழியாக போ்ணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய ஊா்களுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்பூா் அருகே இயங்கும் தோல் தொழிற்சாலைகள், தோல் காலணி தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்களும் சென்று வருகின்றனா்.

தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

பள்ளி மாணவா்களையும் கால்நடைகள் முட்டுகின்றன. அதனால் பள்ளி மாணவா்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். போக்குவரத்துக்கும் இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். திருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நக... மேலும் பார்க்க