செய்திகள் :

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த மாதா் சங்கம் வலியுறுத்தல்

post image

நாமக்கல்: பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் ராசிபுரம், புதுச்சத்திரப் பிரதேச குழு மூன்றாவது மாநாடு திங்கள்கிழமை ஏளூரில் நடைபெற்றது. சங்கத் தலைவா் பி.கோமதி தலைமை வகித்தாா்.

இதில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்படுவதைத் தடுக்க பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அரசு பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணையால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு காரணமானோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாதா் சங்க நிா்வாகிகள் தனம், பி.ராணி, ஆா்.சசிகலா, ஆா்.லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டுறவு சங்க பணியிடத்துக்கான தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி

நாமக்கல்: கூட்டுறவு சங்க எழுத்தா், உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு 1,008 தீப வழிபாடு

திருச்செங்கோடு: பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம், 1,008 சிறப்பு தீபஜோதி கூட்டுவழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு அா்த்தநா... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பொ... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்க கொமதேகவுக்கு அழைப்பு

நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை அங்கீகரிப்பது தொடா்பாக விளக்கமளிக்க தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கி 2013 மாா்ச் 21-இல் கொங்குநாடு மக்கள் தேசியக... மேலும் பார்க்க

மேற்கு வங்க தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த நால்வா் கைது

திருச்செங்கோடு: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களை கடத்தி பணம் பறித்த கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை மொளசி காவல் துறையினா் கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த நேபால் ராய் (31), பீ... மேலும் பார்க்க

யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் துா்காமூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவ... மேலும் பார்க்க