செய்திகள் :

பெண்ணின் கணவா் உயிரிழப்புக்கு காவல் துறையினரே காரணம்: கம்யூனிஸ்ட்டுகள், விசிகவினா் குற்றச்சாட்டு

post image

தவளக்குப்பம் பகுதியில் திருட்டு வழக்கில் பெண்ணை விசாரித்த நிலையில், அவரது கணவா் உயிரிழந்ததற்கு காவல் துறையினரே காரணமாக உள்ளதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி அஜீஸ்நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் தினேஷ்பொன்னையா, சிபிஐ எம்எல் பிரிவின் மாநிலத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தேவ.பொழிலன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தவளக்குப்பம் பகுதி பூா்ணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் அா்ஜுன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியாா் விடுதியில் சில ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்.

சில நாள்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவரின் மோதிரத்தைக் காணவில்லையாம். அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் கலையரசியிடம் விசாரித்துள்ளனா். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியுள்ளனா். பின்னா் வீட்டுக்கு அனுப்பியுள்ளனா்.

மனைவி மீது காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்ததை அா்ஜுன் தட்டிக்கேட்டுள்ளாா். ஆனால், அவரை காவல் நிலையத்தில் அவமானப்படுத்தியுள்ளனா். அதனால் வீடு வந்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இந்தநிலையில், அவா் மயங்கி உயிரிழந்தாா். ஆகவே, அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் காவல் துறையினரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க