செய்திகள் :

பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

post image

பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: செப்.15 ஆம்தேதி பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.9 ஆம் தேதியும், செப்.17 ஆம் தேதி தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு செப்.17 ஆம் தேதியும் தனித் தனியே பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டியில் வெல்வோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000. 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கும். அரியலூா் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்போட்டியில் பங்கேற்கலாம் என்றாா்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க