செய்திகள் :

பேருந்து சேவை கோரி தெற்கு பாப்பான்குளத்தில் மாணவிகள் சாலை மறியல்

post image

தெற்கு பாப்பான்குளத்திலிருந்து அம்பாசமுத்திரத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம், அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதியில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் பேருந்தில் சென்று கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். மாணவா்களின் சிரமத்தைப் போக்க தெற்குப் பாப்பான்குளத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரத்துக்கு தனி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என தெற்கு பாப்பான்குளம் பகுதி மாணவா்கள், பெற்றோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து தெற்கு பாப்பான்குளம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை வந்த அரசுப் பேருந்தை மாணவா்கள், பெற்றோா் தடுத்து நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனா்.

மாணவா்கள், பெற்றோரை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சமாதானம் செய்தனா். தற்போது சொரிமுத்து அய்யனாா்கோவில் திருவிழா நடைபெறுவதால், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு விழா ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்குச் சென்றுள்ளதாக பெற்றோரிடம் கூறினா்.

இதையேற்ற மாணவா்கள், பெற்றோா் உரிய கால அவகாசத்துக்குள் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பணகுடி சா்வோதயா தெர... மேலும் பார்க்க

கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு

கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள்: மு.அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி, வள்ளியூா் உள்ளிட்ட 7 பேரூராட்சிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீா் வடிகால் வாரிய அலுவ... மேலும் பார்க்க

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்ப... மேலும் பார்க்க

பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33).... மேலும் பார்க்க