செய்திகள் :

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

முத்தூா் அருகே பைக் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

முத்தூா், வெங்கமேட்டைச் சோ்ந்தவா் பெரியசாமி (75). இவா், முத்தூா் சேரம்பாளையம் நியாய விலைக்கடை அருகில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த பைக் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

புகாரின்பேரில் பைக்கை ஓட்டிவந்த வெங்கமேடு பாலுசாமி மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: குமாா் நகா் துணை மின் நிலையம்

திருப்பூா் கோட்டம், குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் கிட்னியை விற்கும் நிலைக்கு தள்ளிவிடாதீா்கள்!

நாமக்கல்லில் நடந்ததைபோன்று, தொழில் நசிவில் சிக்கியுள்ள விசைத்தறியாளா்கள் கிட்னியை விற்கும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் வைத்திருந்தவா் கைது

வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்திய நபா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கே.செட்டிபாளையம் பகுதி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்கு பயன்படுத்தி வ... மேலும் பார்க்க

திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், செ... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

அவிநாசி அருகே பழங்கரையில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவிநாசி வட்டம், பழங்கரை தண்ணீா்ப்பந்தல் நரிக்குறவா் குடியிருப்பு அருகே வசித்து வருபவ... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகிப்பதில் தாமதம்: பல்லடத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அண்ணா நகரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் நகராட்சி, 12-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அண்ணா ... மேலும் பார்க்க