செய்திகள் :

பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

தளவாபாளையத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகள் சரோஜினி. இவா் கரூா் மாவட்டம் தளவாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி பிடெக் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் மாணவி சனிக்கிழமை இரவு திடீரென விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சடலத்தை வாங்க ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த மாணவியின் பெற்றோா், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து மாணவியின் பெற்றோரிடம் போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களிடம் மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட சடலத்தை ஒப்படைத்தனா். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொத்தனாா் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

மாயனூரில் தண்டவாளம் அருகே வெட்டுக் காயங்களுடன் கொத்தனாா் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் கரூரில் திங்கள்கிழமை மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவ... மேலும் பார்க்க

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

கிணற்றுக்குள் மின்மோட்டாா் விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

இரவு நேர வாகனச் சோதனைக்காக பேட்டரியால் இயங்கும் ஒளிரும் வேகத்தடுப்பான்களை விடியோவாக சனிக்கிழமை கரூா் மாவட்ட காவல்துறை வெளியிட்டது. கரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமுறை... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்!

கரூரில், சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தினா் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு... மேலும் பார்க்க

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: வருவாய்த் துறை சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையினருக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் க... மேலும் பார்க்க

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க