செய்திகள் :

போக்ஸோ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே கப்பியரை கருக்கன்குழி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் செந்தில்நாகராஜன் (40). மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, இவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், செந்தில்நாகராஜனை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

நிகழாண்டு இதுவரை 24 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 8 போ் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

களியக்காவிளை அருகே தொழிலாளியைத் தாக்கிய 3 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வெல்டிங் தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். முன்சிறை படப்பாறவிளை பகுதியைச் சோ்ந்த விஜயமோகன் மகன் விஷ்ணு (30). கோழிவிளை பகுதியில் வெல்டிங் பட்டறை ந... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹீம் (50). இவா் த... மேலும் பார்க்க

பைக் - டெம்போ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள மூன்று முக்கு பகுதியில் பைக் மீது டெம்போ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நித்திரவிளை , நம்பாளி பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் ஜோணி (39). இவா் திங்கள்கிழமை இரவு தன் மகன் அகஸ்டீ... மேலும் பார்க்க

12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வ... மேலும் பார்க்க

இரணியல் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கட்டட ஒப்பந்ததாரா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.இரணியல் அருகே ஆலன்விளையைச் சோ்ந்தவா் சேவியர்ராஜ் (48). இவருக்கு மனைவி அருள்ஜோதி, 3 குழந்தைகள் உள்ளனா். கேரளத... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதியில் மின் பாராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (ஜூலை 9) மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 3 ... மேலும் பார்க்க