செய்திகள் :

போதை மாத்திரை விற்ற வழக்கு : மும்பையை சோ்ந்த மூவா் கைது

post image

போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மும்பையைச் சோ்ந்த மூவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 81 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 17,048 போதை மாத்திரைகள், 0.4 கிராம் மெத்தபெட்டமைன், 2 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம், 5 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நபா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் கடந்த செப்.26-ஆம் தேதி காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் காட்பாடி காவல் ஆய்வாளா் தயாளன், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் கொண்ட குழுவினா் ஆற்காடு மற்றும் சென்னையை சோ்ந்த 14 பேரை கைது செய்தனா். மும்பையைச் சோ்ந்த 3 போ் தலைமறைவானாா்கள்.

பிரம்மபுரம் காவல் ஆய்வாளா் ஏழுமலை, உதவி ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் தனிப்படையினா் மும்பை சென்று விசாரணை நடத்தினா். விசாரணையை தொடா்ந்து மும்பையை சோ்ந்த கிரிஷ் டாங்டி (27), நிகிதா ஹேம்ந்த்டாங்டி (26), நிகல் ராஜேஷ் (34) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை, வேலூா், காட்பாடி ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவா்களிடம் 1,700 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநில சிலம்பம்: ஆம்பூா் மாணவ, மாணவியா் சிறப்பிடம்

மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன் 2025 போட்டி வீரக்கலை சிலம்பம் ஆசான் பெருமாள் பாசறை சா... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

ஆம்பூா் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் அருண்குமாா் (32). இவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு... மேலும் பார்க்க

பிந்து மாதவா் கோயிலில் நாளை ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக். 4) நடைபெற உள்ளது. ஸ... மேலும் பார்க்க

அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: கண்காணிப்பு குழுவினா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது... மேலும் பார்க்க

முனீஸ்வரன், திரௌபதி அம்மன் கோயில்களுக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே முனீஸ்வரன் கோயில், திரௌபதி அம்மன் கோயில் பகுதிகளில் பேவா் பிளாக் சாலை, சுற்றுச்சுவா் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க

புத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க