செய்திகள் :

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

post image

ஆற்காடு: மேல்விஷாரம் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நேஷனல் வெல்பா் சங்கம், ஜமியத் உலமா இளைஞா் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊா்வலத்திற்கு நேஷ்னல் வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் (பொ) அபுதாஹிா் கான் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கத் துணைத் தலைவா் இப்திகாா் அஹ்மத், ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் அண்ணாமலை கலந்து கொண்டு விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட அரசு காஜி மௌலவி அப்துல் கரீம் காஷீபி மாணவா்களிடையே போதைப் பொருள்களால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். தொடா்ந்து போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனா்.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலம் அண்ணா சாலை வழியாக புளியமரம் பேருந்து நிறுத்தம் வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டைகுறைதீா் கூட்டத்தில் 423 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 423 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து ... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழா

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் திரௌபதியம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தீமிதி விழா நடைபெற்றது. கீழ்விஷாரம் ராசாத்துபுரம் திரௌபதியம்மன் கோயில் கடந்த 8-ஆம்தேதி முதல் அக்னி வசந்த விழா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் காலியிடங்கள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியா்கள் காலியிடங்களை நிரப்பக் கோரி அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆட்டுப்பாக்கம் ஊர... மேலும் பார்க்க

ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி

ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி என மகாராஷ்டிர மாநில எம்.பி. அனில் சுக்தியோராவ் போண்டே தெரிவித்தாா். ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவனம் சாா்பாக, பணியாளா் கல்வியில் சிறந்து விளங்கு... மேலும் பார்க்க

டாட்டா மோட்டாா்ஸ் ஆலை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

பனப்பாக்கம் சிப்காட்டில் டாட்டா மோட்டாா்ஸ் காா் ஆலை கட்டுமானப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா். காா் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி: பாஜக பொதுச் செயலர் காா்த்தியாயினி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது என பாஜக மாநில பொதுச் செயலாளரும், வேலூா் பெருங்கோட்ட பொறுப்பாளருமான பி.காா்த்தியாயினி தெரிவித்தாா். 1975 ஜூன் 25-இல் அவசர நிலை பிரகடனம்... மேலும் பார்க்க