செய்திகள் :

போலி பில் தயாரித்து மோசடி: நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சத்தை கையாடல் செய்த பெண் உதவியாளர் கைது!

post image

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பு மட்டுமல்லாது படத்தயாரிப்பு கம்பெனியும் வைத்திருக்கிறார். எடர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ஆலியா பட் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவரை தனது உதவியாளராக வைத்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து 2024ம் ஆண்டு வரை வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் உதவியாளராக இருந்தார். அந்நேரத்தில் ஆலியா பட்டின் நிதி நிர்வாகம், படப்பிடிப்பு விபரம், பணம் வாங்குவது போன்ற வேலைகளை வேதிகா கவனித்து வந்தார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து செலவு, மீட்டிங் செலவு என பல்வேறு காரணங்களை கூறி போலி பில் தயாரித்து ஆலியா பட்டிடம் கையெழுத்து வாங்கி வேதிகா பணத்தை தனது தோழியின் வங்கிக்கணக்கிற்கு மாற்றினார். அதன் பிறகு அப்பணத்தை அங்கிருந்து தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டார். இது போன்று 2022-24ம் ஆண்டு வரை போலி பில் தயாரித்து 76.9 லட்சத்தை வேதிகா அபகரித்துக்கொண்டார்.

இந்த மோசடியை ஆலியா பட் தாயார் சோனி ரஸ்தான் சமீபத்தில் கண்டுபிடித்தார். வேதிகா தயாரித்து கையெழுத்து வாங்கிய பில்கள் அனைத்தும் ஒரிஜினல் போன்று இருந்தது. இது குறித்து சோனி ரஸ்தான் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து வேதிகாவை தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை அறிந்து கொண்டு வேதிகா தப்பிச்சென்றார். அவர் தொடர்ந்து இடத்தை மாற்றிகொண்டே இருந்தார். முதலில் மும்பையில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பிச்சென்றார். அதன் பிறகு அங்கிருந்து கர்நாடகாவிற்கு தப்பிச்சென்றார்.

பின்னர் அங்கிருந்து புனேவிற்கும் பின்னர் பெங்களூருக்கும் சென்றார். இதையடுத்து பெங்களூரு சென்ற மும்பை போலீஸார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். ஆலியாபட் நடிகர் ஷாருக் கானுடன் சேர்ந்து கொண்டு டார்லிங் என்ற படத்தை தயாரித்தார். தற்போது தனது கணவர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து லவ் அண்ட் வார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் - திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்க... மேலும் பார்க்க

ஆணவ (தற்)கொலை... அழுந்திக் கிடக்கிற ஆணவங்களை தலைதூக்க செய்யுமே..!

மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நாமக்கல் தம்பதியின் செய்தியை வாசிக்கையில், இரண்டு வகையில் மனம் கனத்துக்கொண்டிருக்கிறது. முதலாவதாக, இழந்துவிட... மேலும் பார்க்க

கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா(34). 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றார். 2011-ம் அண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை... மேலும் பார்க்க

சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்

சென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றி வருகிறார். அப்போது பெங்களூருவில் உள்ள கொரியர் கம்பெனியில் சூப்பர் வைஸராக வே... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர் வீட்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசிப்பவ... மேலும் பார்க்க