செய்திகள் :

சென்னை: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; என்ன நடந்தது?

post image

சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராஜேஷ். இவரும் மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ், மது அருந்திவிட்டு அடிக்கடி எதிர்வீட்டில் குடியிருக்கும் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி வந்திருக்கிறார்.

அதனால் ராஜேஷுக்கும் எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

 கைது
கைது

இந்நிலையில் கடந்த 6.7.2025-ம் தேதி மாலை அப்பெண், தன்னுடைய வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, ராஜேஷ் அப்பெண்ணை அவதூறான வார்த்தைகளால் பேசியும், பாலியல் சைகை காட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் தொந்தரவு செய்திருக்கிறார்.

அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா(34). 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றார். 2011-ம் அண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை... மேலும் பார்க்க

சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்

சென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றி வருகிறார். அப்போது பெங்களூருவில் உள்ள கொரியர் கம்பெனியில் சூப்பர் வைஸராக வே... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர் வீட்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

`பணம் தரலைன்னா வீடியோவை வெளியிடுவோம்' - மிரட்டிய இன்ஸ்டா நண்பர்கள்; பறிபோன உயிர்

மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் ராஜ் லீலா மோசடியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் லீலா மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் வசிக்கிறார். அவர் இரவில் தன் தாயாரிடம் படுக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”கடை வாடகை பணம் பிரிப்பதில் தகராறு”- தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன் கைது!

தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர... மேலும் பார்க்க

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிக... மேலும் பார்க்க