செய்திகள் :

`பணம் தரலைன்னா வீடியோவை வெளியிடுவோம்' - மிரட்டிய இன்ஸ்டா நண்பர்கள்; பறிபோன உயிர்

post image

மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் ராஜ் லீலா மோசடியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜ் லீலா மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் வசிக்கிறார். அவர் இரவில் தன் தாயாரிடம் படுக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் காலையில் அவரின் தாயார் அவரை எழுப்பியபோது எழாததால், அண்டை வீட்டார் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் மருத்துவமனையில் அவரை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜ் லால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு ராகுல் பர்வானியும், சபா குரேஷியும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இரண்டு பேரும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானர்கள். அவர்கள் இரண்டு பேரும் எனது ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்றும், குடும்பத்திடம் ரகசிய உறவை தெரிவிப்போம் என கூறி மிரட்டி கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.2.5 கோடியை மிரட்டி வாங்கிக்கொண்டனர்''என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராஜ் லால் தாயார் இது குறித்து போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் இரண்டு பேர் கடந்த மாதம் 7ம் தேதி வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்து சென்றதில் இருந்து எனது மகன் மிகவும் மன அழுத்ததில் இருந்தான்.

என் மகனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானதாகவும், அதிலிருந்து இரண்டு பேரும் என்னை மிரட்டி பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் தெரிவித்தான்''என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு பேர் வீட்டிற்கு வந்து மிரட்டிவிட்டு சென்ற பிறகு இது குறித்து ராஜ்லால் போலீஸிலும் புகார் கொடுத்து இருந்தார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜ்லால் மிரட்டலுக்கு பயந்து தனது குடும்ப சேமிப்பு பணம் மற்றும் தனது கம்பெனி பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரும் ராஜ் லாலை மிரட்டி ஆடம்பர கார் ஒன்று வாங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. மிரட்டி பணம் பறித்த இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா(34). 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றார். 2011-ம் அண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை... மேலும் பார்க்க

சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்

சென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றி வருகிறார். அப்போது பெங்களூருவில் உள்ள கொரியர் கம்பெனியில் சூப்பர் வைஸராக வே... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர் வீட்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசிப்பவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”கடை வாடகை பணம் பிரிப்பதில் தகராறு”- தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன் கைது!

தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர... மேலும் பார்க்க

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிக... மேலும் பார்க்க