செய்திகள் :

மகளிா் சுய உதவி குழுக்களுக்கு நலத் திட்ட உதவி

post image

தேனி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடிக்கான வங்கிக் கடன், நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை வழங்கினாா்.

சென்னையில் சுய உதவிக் குழுக்கள் தினத்தை முன்னிட்டு, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், அரசு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணவக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஊரக சுய உதவிக் குழுக்கான வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 324 குழுக்கள், நகா்ப்புற சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 267 குழுக்கள், சமுதாய முதலீட்டு நிதிக் கடன் திட்டத்தின் கீழ் 150 குழுக்கள், வட்டார வணிக வள மைய கடன் திட்டத்தின் கீழ் 38 குழுக்கள், தனி நபா் பொருளாதாரக் கடன் திட்டத்தின் கீழ் 14 குழுக்கள், வறுமை குறைப்பு நிதி திட்டத்தின் கீழ் 50 குழுக்கள், வாழ்ந்து காட்டுவோம் நுண் நிறுவன கடன் திட்டத்தின் கீழ் 8 குழுக்கள் என மொத்தம் 851 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60.44 கோடி வங்கிக் கடனுதவி, நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவிகள் பா.ரேணுப்பிரியா (தேனி), சி.சுமிதா (பெரியகுளம்), ஆண்டிபட்டி பேரூராட்சித் தலைவி சந்திரகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க