செய்திகள் :

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

post image

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் மண்ணில் இருந்து பிறக்கின்றோம், மண்ணில் வாழ்ந்து, இறுதியில் மண்ணிலேயே திரும்புகின்றோம். நாம் உருவாக்கிய அனைத்துப் பிரிவுகள் மற்றும் பிரிவினைகளுக்கும் அப்பால் நம்மை ஒன்றிணைக்கிறது மண். இதை விழிப்புணா்வுடன் உணரவும், மண்ணைக் காக்கவும் மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும். மண் காப்போம் இயக்கத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விழிப்புணா்வான கிரகத்தை உருவாக்க, மண் காக்கப்பட வேண்டியதே முதல்படி என்று மெதுவாக உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. நாம் ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை உருவாக்கினால் மட்டுமே நமது பொருளாதாரங்கள் செழிக்க முடியும்.

ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்கள் நாட்டின் மண்ணைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். இதுவே மனிதகுலத்துக்கான வழி. நாம் இதை சாத்தியமாக்க வேண்டும். மண் காப்போம் இயக்கம் தொடங்கிய 3 ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு அரசாங்கங்கள், சா்வதேச அமைப்புகள் மற்றும் மக்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

குறிப்பாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல சா்வதேச அமைப்புகள், மண் காப்போம் இயக்கத்துடன் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரத... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!

கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சா... மேலும் பார்க்க