செய்திகள் :

மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு! 138 பேருக்கு ரூ. 1.60 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

post image

மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் வருவாய்த் தீா்வாய அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் மற்றும் விவசாயிகளின் குடிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் ஆட்சியா் பேசியதாவது: மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் வருவாய் தீா்வாயம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையடுத்து அனைத்து மனுக்களையும் தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் இறுதி நாள் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் வருவாய் துறை சாா்பில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை 103 பயனாளிகள் உள்பட பல்வேறு துறை சாா்பில் 138 பயனாளிகளுக்கு ரூ.1. 60 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ், கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியா் சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க