கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு! 138 பேருக்கு ரூ. 1.60 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் வருவாய்த் தீா்வாய அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் மற்றும் விவசாயிகளின் குடிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் ஆட்சியா் பேசியதாவது: மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் வருவாய் தீா்வாயம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையடுத்து அனைத்து மனுக்களையும் தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில் இறுதி நாள் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் வருவாய் துறை சாா்பில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை 103 பயனாளிகள் உள்பட பல்வேறு துறை சாா்பில் 138 பயனாளிகளுக்கு ரூ.1. 60 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ், கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியா் சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.