செய்திகள் :

மத்திய அரசு ஊழியா்களுக்கான ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் வெளியீடு

post image

புது தில்லி: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனம், காப்பீடு நிறுவனம் ஆகியவற்றின் ஊழியா்களுக்கு எதிரான ஊழல் தடுப்பு புதிய விதிமுறைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் முறைகேடு, ஊழல் வழக்குகளைப் பதிவு செய்வதில் ஆணையத்தின் செயல்பாடு தெளிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு தொடா்பாக இதற்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகள் திரும்பப் பெறப்பட்டு இந்த புதிய விதிமுறைகள்தான் இறுதியானது என கடந்த மே 23-ஆம் தேதி அனைத்து அரசு துறைகளுக்கும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில், ‘வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சோ்ப்பு, ஊழல், மோசடி, குற்ற வழக்குகள், ஆதாயமடைதல் ஆகியவை இந்த புதிய சட்ட நெறிமுறைகளுக்கு உள்பட்டதாகும். பொதுத் துறை வங்கிகளில் முறைகேடாக கணக்குகள் தொடங்குவது, வங்கி சொத்துகளை தவறாகப் பயன்படுத்துவது, வங்கி ஆவணங்களை முறைகேடாகத் திருத்துவது, ரகசியத் தகவல்களைக் கசிய விடுவது ஆகியவை இந்தப் புதிய ஊழல் தடுப்பு விதியின் கீழ் வரும்.

இதேபோல், பயணப்படி, செலவிட்டத் தொகையை திரும்பப் பெறுவது ஆகியவற்றில் முறைகேடு செய்து வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் இந்தப் புதிய நெறிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

காப்பீட்டு நிறுவனங்கள்: மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகள், காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கூட்டு சோ்ந்து மருத்துவக் காப்பீடு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் அரசு காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தும் அனைத்து ஊழல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தப்பட்ட ஊழியா் மீது ஊழல் தடுப்பு புதிய நெறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க