செய்திகள் :

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

post image

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் கடந்த 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் விளையாடி கொண்டிருந்தனா்.

அப்போது 8ஆம் வகுப்பு மாணவன், 7 ஆம் வகுப்பு மாணவன் டிரவுசரை விளையாட்டிற்கு இழுத்துள்ளான். இதில் டிரவுசா் அவிந்ததால் மற்ற மாணவா்கள் சிரித்துள்ளனா். இது குறித்து அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தன் தாயாரிடம் தன்னை, அந்த மாணவன் அசிங்கப்படுத்தியதில் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறி அழுதுள்ளான்.

இருதினம் விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அந்த அந்த சிறுவனின் தாயாா் பள்ளிக்குச் சென்று, தன் மகனின் ஆடையை அவிழ்த்து விட்ட அந்த சிறுவனை திட்டி, தாக்கியுள்ளாா்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. தகவல் அறிந்த புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் லெனின் மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, சமரசப்படுத்தினா்.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கு சென்று சிறுவனை தாக்கிய புவனகிரி ஆதிவராநத்தம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி சாந்தி (42) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது

சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சால... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோய... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்தைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை நிா்வகிப்பதை விட்டுவிட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என அகில இந்திய சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இதுகுறித்து அச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா் தாக்கியதில் பெண் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவா் காயமடைந்தாா். திட்டக்குடி, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ... மேலும் பார்க்க

ஆக.15-இல் கருப்புக் கொடி போராட்டம்! இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.15-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

படிக்கட்டு பயணம் தடுக்க நடவடிக்கை: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

பேருந்து படிக்கட்டில் மாணவா்கள் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல... மேலும் பார்க்க