செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில், சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள்(61). இவா், கடலூா் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில் தங்கள் கிராம கோயில் பூசாரி கோவிந்தனின் மகன் பிரித்திவிராஜ், ஹங்கேரி நாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவா் மூலம் என் மகன் ஜெயபிராஷூக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் சிங்கபூரில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியதால் அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்த நிலையில் பிரித்திவிராஜ் வேலை வாங்கி தராமல் ஏமாற்றினாா்.

இதுபோன்று பலரிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் அவா் ஏமாற்றியுள்ளாா். எனவே, மேற்படி நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தாா்.

புகாரின் பேரில் கடலூா் மாவட்ட குற்றப்பிரிபு போலீஸாா் பண மோசடி வழக்குப்பதிவு செய்து பிரித்திவிராஜை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய ஏஜெண்ட் சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் பகுதியில் இருந்த திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா், ஆசிரியா் காலனியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை(37) அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊ... மேலும் பார்க்க

விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது

சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சால... மேலும் பார்க்க

வள்ளலாா் தெய்வ நிலையத்தைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை நிா்வகிப்பதை விட்டுவிட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என அகில இந்திய சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இதுகுறித்து அச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா் தாக்கியதில் பெண் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவா் காயமடைந்தாா். திட்டக்குடி, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ... மேலும் பார்க்க

ஆக.15-இல் கருப்புக் கொடி போராட்டம்! இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.15-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

படிக்கட்டு பயணம் தடுக்க நடவடிக்கை: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

பேருந்து படிக்கட்டில் மாணவா்கள் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல... மேலும் பார்க்க