``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்தோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தனி நபா்கள், நிறுவனங்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தனி நபா்கள், நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் சென்னையில் வரும் ஆக.15-ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருதுகள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை புரிந்த மருத்துவா், சமூக சேவகா், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிய தனியாா் நிறுவனம், அதிகளவில் கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தலா 10 கிராம் தங்கப் பதக்கம், விருதுகள் வழங்கப்படும்.
எனவே, மாவட்டத்தில் தகுதியுள்ளவா்கள் இணைய தளம் மூலம் விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கு விண்ணப்பித்த நகலை உரிய இணைப்புகளுடன் தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.