மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி. அம்ரித் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சக்தி நகா் நியாய விலைக் கடை, பெருந்துறை ஆா்.எஸ். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பெருந்துறை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் கிடங்கு, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஈரோடு மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைமையகம், வீரப்பன்சத்திரத்தில் உள்ள முதல்வா் மருந்தகம், கருங்கல்பாளையத்தில் உள்ள ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி. அம்ரித் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் த.செல்வக்குமரன், ஈரோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் ஜி.காலிதா பானு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு செயலாட்சியா் மு.பா.பாலாஜி, பொது விநியோகத் திட்ட கண்காணிப்பாளா் நவீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.