மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியப் பேரவைக்கூட்டம் எலச்சிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
நூறு நாள் திட்டத்தில் அனைத்து தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சம்பளப் பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும்.
வீட்டுமனைக் கேட்டு மனு அளித்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். எலச்சிப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
வையப்பமலையில் புகா் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20 வரை அனைத்து கிராமங்களிலும் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரப் பயணம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அக்கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.