செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே பூட்டிய வீட்டில் பைக், மடிக்கணினி திருட்டு

post image

மாா்த்தாண்டம் அருகே நீண்ட நாள்களாக பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிள், மடிக்கணினி மற்றும் பாத்திரங்களை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, புல்லாணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுதாகரன் (71). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா். இவரது மகள் அனுஜா (37), திருமணமாகி கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் வசித்து வருகிறாா். மகளுடன் சுதாகரன் எா்ணாகுளத்தில் வசித்து வருகிறாா். மருதங்கோட்டில் உள்ள வீடு கடந்த 2 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவரது தம்பி புஷ்பாகரன் இதுகுறித்து சுதாகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சுதாகரன் மற்றும் அவரது மகள் அனுஜா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 2 மடிக்கணினிகள், மோட்டாா் சைக்கிள் மற்றும் செம்பு பானைகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சுதாகரன் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

களியக்காவிளையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

களியக்காவிளை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, வாா்டு... மேலும் பார்க்க

நாகா்கோவில் அநாதை மடத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க எதிா்ப்பு

நாகா்கோவில், அநாதை மடத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மேயா் ரெ.மகேஷ் தலைமையில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: வியாபாரி காயம்

புதுக்கடை அருகே தொழிக்கோடு பகுதியில் இரு பைக்குகள் மோதியதில் வியாபாரி காயமடைந்தாா். கருங்கல், மங்கலக்குன்று பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (32). வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை கருங்கல்லிலிருந்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கிள்ள... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழி அருகே விபத்து: பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா். ஆரல்வாய்மொழி அருகே தோவாளை கமல் நகரைச் சோ்ந்த பூ வியாபாரி ராஜன். இவரது மகன் பாலாஜி (17), நாகா்க... மேலும் பார்க்க

மீனவா் தற்கொலை

புதுக்கடை அருகே இனயம் மீனவக் கிராமத்தில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம், 16ஆம் அன்பியத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை (69). மீனவரான இவா், அப்பகுதியிலுள்ள தனது மகள் வீட்டில் வசித்துவந... மேலும் பார்க்க