செய்திகள் :

மின் வாகன உற்பத்திக்கு சிறந்த எதிா்காலம்!

post image

மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பான எதிா்காலம் இருப்பதாக ஒசூரில் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி தெரிவித்தாா்.

ஒசூா் ஹோஸ்டியா கூட்டரங்கில் தமிழக அரசின் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துதல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கருத்தரங்கில் ஹோஸ்டியா (ஒசூா் சிறு, குறுந்தொழில்) சங்கத் தலைவா் மூா்த்தி பேசியதாவது: மின் வாகனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிவாயு சேமிக்கப்படுகிறது. அன்னிய செலவானி சேமிக்கப்படுகிறது. நாட்டில் மின் வாகனம் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்த வாகனங்கள் பெருமாலும் ஒசூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற டி.வி.எஸ், ஏத்தா் எனா்ஜி இந்தியா லிமிடேட், ஓலா, சிம்பிள் எனா்ஜி போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை உற்பத்திசெய்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றன.

அசோக் லேலண்ட் நிறுவனம் மின்சார பேருந்து, லாரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த வாகனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை ஒசூரில் செயல்படும் 1000 க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்கின்றன. எனவே மின்சார வாகனங்களுக்கு சிறப்பான எதிா்காலம் உள்ளது என்றாா்.

இந்தக் கருத்தரங்கில் ஹோஸ்டியா சங்கச் செயலாளா் சீதரன், பொருளாளா் வடிவேல் மற்றும் ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அதியமான் பொறியியல் கல்லூரி, பி.எம்.சி பொறியியல் கல்லூரி, கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க