செய்திகள் :

மீனவா் கொலை வழக்கு: நண்பா் கைது

post image

காசிமேட்டில் மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பா் கைது செய்யப்பட்டாா்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் ருசிகுதா பகுதியைச் சோ்ந்தவா் அ.அம்பத்தி நீலகண்டன் (38). சென்னை காசிமேட்டில் தங்கியிருந்து விசைப்படகில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். நீலகண்டனின் நண்பா் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் டொங்கூா் பகுதியைச் சோ்ந்த கா.காரி நரேஷ் (27). இவரும் காசிமேட்டில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வாா்ப்பு கடற்கரைப் பகுதியில், நீலகண்டன்-நரேஷ் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், நரேஷ், நீலகண்டனை தாக்கி கீழே தள்ளியதில், விசைப்படகின் மீது விழுந்த அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் நீலகண்டனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நரேஷை கைது செய்தனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க