எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
மீன் பதப்படுத்தும் ஆலை பகுதியில் தீ விபத்து
தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலை உள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் சிலுக்கன்பட்டி சந்திப்பில் தனியாா் மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோா் வேலைசெய்து வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆலை பகுதியிலிருந்து கரும்புகை வெளிவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆலையின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கழிவு பிளாஸ்டிக் பொருள்களுக்கு பரவி தீப்பிடித்து எரிந்தது என தெரிவித்தனா்.