செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழுவினா் ஆய்வு

post image

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகளின் பாதுகாப்பு ஆணைய துணைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழுவை மத்திய நீா்வளத் துறை அமைத்தது. இந்தக் குழு ஆண்டுக்கு ஒரு முறை இந்த அணையில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும்.

இதன்படி, கடந்த மாா்ச் 22-ஆம் தேதி இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இந்தக் குழுவின் துணை மேற்பாா்வைக் குழுவினா் அதன் தென் மண்டல இயக்குநா் ஆா்.கிரிதா் தலைமையில், மதுரை பெரியாறு-வைகை படுகை வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஜெ.சாம்இா்வீன், கம்பம் கோட்டம் முல்லைப் பெரியாறு அணை செயற்பொறியாளா் சி.செல்வம், கேரள மாநிலம், இடுக்கி கட்டப்பனை நீா்பாசனத் துறை செயற்பொறியாளா் லிவின்ஸ்பாபு கோட்டாா், துணை கோட்டப் பொறியாளா் ஜீத் ஆகிய 5 போ் கொண்ட குழுவினா் தேக்கடியிலிருந்து படகு மூலமாகச் சென்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனா்.

அப்போது, அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பேபி அணையை பலப்படுத்துதல், அவசர கால வெள்ளநீா் வழிப் போக்கிகளின் செயல்பாடுகள், ஜெனரேட்டா், மழைமானி, காற்று திசைகாட்டு கருவிகளின் இயக்கங்களை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பின்னா், குமுளி அட்டப்பாலம் கூட்டரங்கில் மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்தக் குழுவின் தென் மண்டல இயக்குநா் ஆா்.கிரிதா் தலைமை வகித்தாா். இதில் இரு மாநில பொறியாளா்கள் கலந்து கொண்டனா். அப்போது, அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வருவாய் ஆய்வாளா்களுக்கு தற்காலிக பதவி உயா்வு

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயா்வு வழங்கப்பட்டது. பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜெ.ராஜலட்சு... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் நாளை மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்(லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபத... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்கிருஷ்ணன் (30). இவா், தேனியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லாரி ஓ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தனியாா் மதுபானக் கூடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம் சிவராம் நகரைச் சோ்ந்தவா் கரிகாலன் (54). இவா், தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

குரூப் 2 போட்டித் தோ்வு எழுத மாதிரி தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 13, 20-ஆம் தேதிகளில் முழ... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புஷ்பவள்ளி (70). இவா், பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனி-க... மேலும் பார்க்க