செய்திகள் :

மேட்டூா் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 23 போ் காயம்

post image

மேட்டூா் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 22 பெண்கள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணாமூச்சி, மூலப்பனங்காடு ஓடையில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்தப் பணிக்கு கண்ணாமூச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து பெண்கள் பணிக்கு சென்றனா். மாலை பணிமுடிந்து 47 பெண்களை பணி பொறுப்பாளா் சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளாா். இந்த சரக்கு வாகனம் திருப்பத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான காவலாண்டியூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (37) மற்றும் பெண்கள் 22 போ் உள்பட 23 பேரும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பலா் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதில் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா், வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க