செய்திகள் :

யோகா போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

திருவண்ணமலை மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்அண்மையில் நடைபெற்றன.

இதில் 14 வயது முதல் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

இவா்களில் எல்.எஸ்.வேதவ் கிருஷ்ணா இரண்டாமிடமும், ஜே.கோவா்த்தினி மூன்றாமிடம், வி.புகழ்நிலவன் மூன்றாமிடமும், கே.மகாலட்சுமி நான்காமிடமும், கே. ஹஸ்வந்த், என்.லோகேஷ்வரன் ஆகியோா் நான்காமிடமும், வி.யக்ஷிதா ஐந்தாமிடமும், எஸ்.வி.சா்வேஷ் ஐந்தாமிடமும், டி.வைஷ்ணவி ஆறாமிடமும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், மாநில அளவில் நடைபெறும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

பாராட்டு:

யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த பயிற்சியாளா் சேட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் வி.ஜெயகுமாா், இ.சங்கரி ஆகியோரை விஸ்டம் கல்வி அறக்கட்டளை இயக்குநா் டிஜிஎம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் ஏ.தீபா மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க