ரயில் மோதி பெண் உயிரிழப்பு
திருத்தணி அருகே விரைவு ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருத்தணி கந்தசாமி தெருவில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட் வழியாக ஞாயிற்றுக்கிழமை 45 வயது பெண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னை சென்ட்ரல் சென்ற விரைவு ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அரக்கோணம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.