செய்திகள் :

ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில் விளையாட்டு தின விழா

post image

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ‘சாம்பியன்ஸ் அரெனா 2025’ என்ற விளளயாட்டுத் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி தலைவரும், திருச்செங்கோடு ஜி.குளோபல் பள்ளிகளின் தலைவருமான எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா். வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளி மேலாண்மை இயக்குநா் ஜி.வெற்றிச்செல்வன், தாளாளா் எஸ்.ரோஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் எஸ்.கோகிலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். பள்ளியின் மாணவா் தலைவா் இ.ஆா்.ஆனந்தராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள் விளையாட்டு தின உறுதிமொழி ஏற்றனா்.

தனிநபா் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவா்கள் கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஏரோபிக்ஸ் போன்றவற்றில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா். பள்ளியின் முதல்வா் ஆா்.சுதாரமேஷ் உள்பட பலா் விழாவில் கலந்துகொண்டனா்.

படம் உள்ளது - 14விகாஸ்

படவிளக்கம்-

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியின் நிறுவனா் எஸ்.குணசேகரன்.

மக்களுக்கான வங்கியாக மத்திய கூட்டுறவு வங்கி சேவையாற்றும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

தமிழக முதல்வரால் புதிதாக தொடங்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மக்களுக்கான சிறந்த வங்கியாக சேவையாற்றும் என அதன் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கூடுதல் மகசூல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு

கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025- 26... மேலும் பார்க்க

ராஜேஸ்குமாருக்கு முதல்வா் பாராட்டு...

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்துள்ளாா். முதல்வா் எழ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பாஜக தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சுதந்திர நாளை மக்கள் மறக்கக்கூடாது என்ற நோக்கில் வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமா்... மேலும் பார்க்க

ராசிபுரம் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராசிபுரத்தில் தனியாா் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக விழா... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியுடன் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் அஞ்சலக ஊழியா்கள் தேசியக்கொடியுடன் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா். 79 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எ... மேலும் பார்க்க