``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
ராமநாதபுரத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தினத்தையொட்டி ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் குணசேகரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதன் பிறகு, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான விழிப்புணா்வு குறித்த கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.