செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் விடுதலை

post image

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை தலா ரூ. 5 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்தும், 16 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகுகள், நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 24 போ் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 8 பேரை தலா ரூ. 5 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்தும், எஞ்சிய 16 மீனவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றாா் நீதிபதி.

இதையடுத்து, காவல் நீட்டிக்கப்பட்ட 16 மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க