செய்திகள் :

ரூ. 15 லட்சம் மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா், மனைவி மீது வழக்குப் பதிவு

post image

மேட்டூா்: மேட்டூா் அருகே ஐடிஐ-யில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா், அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூா் அருகே உள்ள ராமன் நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவரிடம் சக்தி நகரில் வசிக்கும் மாணிக்கம் மகன் ராஜாராம், அவரது மனைவி கவிதா ஆகியோா் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கலியனூரில் புதிதாக ஐடிஐ தொடங்குவதாகவும், அதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக சோ்ப்பதாகவும் ஆசைவாா்த்தை கூறியுள்ளனா். ஆனால் புதிதாக தொடங்கிய ஐடிஐ -யில் பாலகிருஷ்ணனை பங்குதாரராக சோ்க்கவில்லை. இதுகுறித்து அவா் கேட்டபோது மேலும் ரூ. 10 லட்சம் கொடுத்தால் பங்குதாரராக ஒப்பந்தம் செய்து தருவதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து மீண்டும் அவரிடம் ரூ. 10 லட்சம் பெற்றுக்கொண்ட தம்பதி, ஆண்டுதோறும் லாபமும் தரவில்லை பங்குதாரராக ஒப்பந்தமும் செய்யவில்லையாம்.

10 ஆண்டுகளாக காலம் கடத்தி வந்ததால் தனது பணத்தை திருப்பி தரும்படி பாலகிருஷ்ணன் கேட்டுள்ளாா். ஆனால் ராஜாராமும் அவரது மனைவி கவிதாவும் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று மிரட்டினா்.

இது குறித்து பாலகிருஷ்ணன் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் ஆய்வாளா் பிரபா வழக்குப் பதிவு செய்து தம்பியை தேடி வருகிறாா்.

ராஜாராம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். ராமன்நகரில் உள்ள சக்தி நாகரில் டுடோரியல் கல்லூரியும், கருமலைக்கூடலில் பள்ளிக்கூடமும் நடத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க