செய்திகள் :

ரூ.18 லட்சத்தில் கூட்ட அரங்கம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

post image

அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18 லட்சத்தில் கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்தாா்.

அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலா் ஆா். பிரபாகரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் எல். சீனிவாசன் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் பானுமதி முன்னிலை வகித்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில், ராஜேந்திரன், காா்த்திக் ஜவஹா், கதவாளம் ஊராட்சி மன்றத் தலைவா் சக்தி கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கடந்த ஆண்டு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சி காட்டிய ஆசிரியா்களும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு

ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்தி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப... மேலும் பார்க்க

மாசி கரக தீமிதி திருவிழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா். குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்ப... மேலும் பார்க்க

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைம... மேலும் பார்க்க

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிரு... மேலும் பார்க்க