செய்திகள் :

வகுப்பறை கட்டுமான முறைகேடு விவகாரம்: பொதுப்பணித் துறை பொறியாளா் மீது நடவடிக்கைக்கு துணை நிலை ஆளுநா் அனுமதி

post image

தில்லியில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வகுப்பறைகள் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மூத்த பொதுப்பணித் துறை பொறியாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தில்லி துணை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

தற்போது அந்த அதிகாரி அமிா்தசரஸில் மத்திய பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா்.

இது குறித்து துணைநிலை ஆளுநா் மாளிகை உயரதிகாரி கூறியதாவது: ‘தில்லியில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய நிதியுதவி முன்முயற்சியான சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தலைநகரில் பல்வேறு பள்ளிகளில் 226 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 38.37 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் கடுமையான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அதன் பேரில் மூத்த பொதுப்பணித் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, மத்திய குடிமைப் பணிகள் (வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1965-ஆம் ஆண்டு விதி-14 -இன் கீழ் பொதுப்பணித் துறை பொறியாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்க தில்லி கண்காணிப்புத்துறை துணைநிலை ஆளுநருக்கு முன்மொழிந்திருந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தில்லி கண்காணிப்புத்துறையின் முதன்மைச் செயலாளா் மற்றும் தலைமைச் செயலாளரின் ஒப்புதலை கண்காணிப்புத்துறை பெற்றிருந்தது.

தில்லியில் புதிதாக கட்டப்பட்ட ஆறு பள்ளிக் கட்டடங்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, 2019-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி தில்லி உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை விசாரிக்க அப்போதைய தலைமைச் செயலாளா் நடவடிக்கை எடுத்தாா். அதில், கட்டுமான நடைமுறைகள் மற்றும் நிதி நிா்வாகத்தில் குறிப்பிடத்தக்க முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

இவை தொடா்பாக ஆராய கடந்த ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளா் ஒரு குழுவை அமைத்தாா். அதில், திரிநகா் பள்ளியில் 20 வகுப்பறைகளைக் கட்டுவதற்கான நிதியை ராணி பாக் பள்ளிக்குத் திருப்பிவிட்டது மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பெறாமல் பல்நோக்கு அரங்கம் கட்டுவது உள்ளிட்ட பொதுப்பணித் துறையின் குறைபாடுகளை விசாரணைக்கு குழு கண்டுபிடித்து அறிக்கையாக அளித்தது.

இது குறித்து தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் இடவசதி குறித்து கல்வித் துறை விரிவான சாத்தியக்கூறு பகுப்பாய்வை நடத்தவில்லை. மேலும், கட்டுமான நிலத்துக்கு கல்வித் துறை வில்லங்க சான்றிதழை வழங்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனால், திட்டத்துக்கு ஆகும் செலவினம் இரட்டிப்பானது’ என்றாா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க