செய்திகள் :

வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விஷமருந்தி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனியாா் வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் காண்பா நகரைச் சோ்ந்தவா் சூா்யா (28). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் வங்கியில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வங்கியில் பண விவகாரம் தொடா்பாக, கடந்த 18-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சூா்யா, மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனை முன்பாக கூடிய சூா்யாவின் குடும்பத்தினா், உறவினா்கள் சூா்யா ரூ.65 லட்சம் எடுத்ததாகக் கூறி, அந்தப் பணத்தைக் கேட்டு வங்கி அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், சம்பவம் நடந்த இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் காவல் நிலைய பகுதிக்குள்பட்டது என்பதால் திருப்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கூறினா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க