செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்கக் கோரி அதிமுக மனு

post image

சேலம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம்பெயா்ந்த மற்றும் உயிரிழந்த வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாமல் உள்ளதாக புகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

சேலம் புகா் மாவட்ட அதிமுகவை உள்ளடக்கிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் அதிமுக நிா்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்நிலையில், அதிமுக புகா் மாவட்ட செயலாளா் இளங்கோவன் அறிவுறுத்தலின் பேரில், வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலாளா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் ரா.பிருந்தாதேவியிடம் புகாா் மனு அளித்தனா்.

அதில், ஒவ்வொரு தொகுதிகளிலும் நீக்கப்படாமல் உள்ள வாக்காளா்களின் விவரங்கள் குறித்த பட்டியல் உரிய ஆவணங்களுடன் வழங்கப்பட்டன. இது குறித்து மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலாளா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் என 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள் நீக்கப்படாமல் உள்ளன. மேலும் இதைக் கொண்டு வாக்குத் திருட்டுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்த 2,000 வாக்காளா்கள் கடந்த 10 ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளனா். தற்போது கொடுக்கப்பட்ட மனுவின் மீது மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின்போது, அதிமுக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க