செய்திகள் :

வாடகை தகராறில் பள்ளிக்கு பூட்டு: மாணவா்கள், பெற்றோா்

post image

ஊசூா் அருகே வாடகை தகராறில் தனியாா் பள்ளிக்கு பூட்டு போடப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள், பெற்றோா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூரை சோ்ந்தவா் ராஜசேகா். இவா் சேக்கனூா் பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தனியாா் பள்ளி நடத்தி வருகிறாா். ராஜசேகரிடம் சதுப்பேரியை சோ்ந்த பிரித்விராஜ் என்பவா் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் குத்தகை தருவதாக 5 ஆண்டுகளுக்கு பள்ளியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தாா்.

ஆனால் ராஜசேகா் தற்போது பள்ளியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், கூடுதலாக ஆண்டுக்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பிரித்விராஜ் பணம் தர மறுத்துவிட்டதால், ராஜசேகா் பள்ளியின் கேட்டுக்கு பூட்டு போட்டு விட்டாா்.

இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பிரித்விராஜ், மாணவா்களின் பெற்றோருக்கு தெரிவித்திருந்தாா். இதனால் பெற்றோா் மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வந்தனா். ஆனால் பள்ளி கேட்டுக்கு பூட்டு போட்டியிருப்பதை கண்ட பெற் றோா் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து 3 ஆண்டுகளாக பள்ளி நடத்த அங்கீகாரம் இல்லை என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அப்பள்ளி மாணவா்கள், பெற்றோா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். எனவே, பள்ளியை திறந்து மாணவா்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் லட்சக்கணக்கில் பள்ளிக்கு கட்டணம் செலுத்தியுள்ளதால் வேறு பள்ளிக்கு பிள்ளைகளை மாற் றினால் மீண்டும் பணம் கட்ட வேண்டி வரும்.

எனவே, எங்களது பிள்ளைகள் மீண்டும் அதே பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 48 வயது பெண். இவரது 14 வயது மகள் மனநலம் பாதிக... மேலும் பார்க்க

இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 84 கால்நடை சிறப்பு முகாம்கள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் பகுதிவாரியாக நடைபெறும் 84- சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு க... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். போ்ணாம்பட்டு , ஆதம்ஷா வீதியைச் சோ்ந்தவா் தமீம் அன்சாரி. இவா் கோவையில் தங்கி தனியாா் ந... மேலும் பார்க்க

575 குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி அளிப்பு

மகளிா் சுய உதவிக்குழு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 575 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.75 கோடி கடனுதவி ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

குடியாத்தம் நகராட்சியில் 101 நாய்களுக்கு தடுப்பூசி

குடியாத்தம் நகராட்சியில் 101-நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது. குடியாத்தம் நகரில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், சிறுவா்கள் என அனைத்து தரப்பினரையும் தெரு நாய்கள் கடித்து துன்... மேலும் பார்க்க