செய்திகள் :

வாலாஜாபேட்டை அருகே பலத்த மழையால் 350 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

வாலாஜாபேட்டை அருகே 6 கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு நெற்பயிா்கள் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. உரிய நிவாரணம் வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாலாஜாபேட்டை, சுற்றுவட்டார கிராமங்களான பாகவெளி, ராமாபுரம், வள்ளுவம்பாக்கம், முசிறி, குப்பத்துமோட்டூா், ஈச்சந்தாங்கல் உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் பலத்த மழை வெள்ள நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த 5 மாதங்களாக இரவு பகல் பாராமல் வளா்த்து வந்து அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட நெற்பயிா்கள் தற்போது 3 நாள்களாக பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பது எங்களுக்கு ஒரு துக்க நிகழ்வாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மேலும், சேதமடைந்த நெல் பயிரை இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து பாா்வையிடவில்லை, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவல்பூா் புதிய மேம்பாலம்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.34.14 கோடியில் கட்டப்பட்ட நவல்பூா் புதிய மேம்பாலத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். முப்பதுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் இளங்கோவன்( 30) இவா் புதன்கிழமை அதிக... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

குருவராஜப்பேட்டையில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். அரக்கோணம் ஒன்றியம், செம்பேடு ஊராட்ச... மேலும் பார்க்க

பள்ளி விளையாட்டு விழா

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் 44-ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் வீரமுருகன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை வி. ராதிகா முன்னிலை வகித்தாா். விழாவில் சென்னை முகப்ப... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (42). இவா், வியாழக்கிழமை தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்... மேலும் பார்க்க