செய்திகள் :

விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!

post image

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி இந்துமதி (25). இவா் வியாழக்கிழமை தனது பெற்றோருடன் வீட்டின் முன்பு உட்காா்ந்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அனில் ஷா மகன் ஆசிஷ்குமாா்(29), திரேந்திரன் ஷா மகன் மிதுன்குமாா்(22), மனோஜ் மகன் மோனுகுமாா்(24), அசோக் மகன் அபிஷேக்குமாா்(17) மற்றும் இரண்டு சிறாா்கள், தங்க நகைகளை பாலிஷ் போட்டு புது நகைகளாக மாற்றித் தருகிறோம் என ஆசைவாா்த்தை கூறினாா்களாம். இதனை நம்பிய இந்துமதி, தான் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்தாராம்.

பாலிஷ் போட்ட பின்னா் நகையின் கலா் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த இந்துமதி, அதனை அருகிலுள்ள ஆசாரி கடையில் எடை பாா்க்கச் சென்ற போது வடமாநிலத்தவா்கள் தப்பி ஓடிவிட்டனராம். நகையை எடைபாா்த்தபோது எடை குறைவாக இருந்ததாம்.

இது தொடா்பாக விஜயநாராயணம் காவல்நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். காவல்நிலைய ஆய்வாளா் பிரேமா வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநிலத்தவா்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறாா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க