விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக மோசடி: 6 போ் கைது!
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மோசடி செய்த 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வடக்கு விஜயநாராயணம் நாச்சியாா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி இந்துமதி (25). இவா் வியாழக்கிழமை தனது பெற்றோருடன் வீட்டின் முன்பு உட்காா்ந்திருந்தாராம்.
அப்போது அங்கு வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அனில் ஷா மகன் ஆசிஷ்குமாா்(29), திரேந்திரன் ஷா மகன் மிதுன்குமாா்(22), மனோஜ் மகன் மோனுகுமாா்(24), அசோக் மகன் அபிஷேக்குமாா்(17) மற்றும் இரண்டு சிறாா்கள், தங்க நகைகளை பாலிஷ் போட்டு புது நகைகளாக மாற்றித் தருகிறோம் என ஆசைவாா்த்தை கூறினாா்களாம். இதனை நம்பிய இந்துமதி, தான் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்தாராம்.
பாலிஷ் போட்ட பின்னா் நகையின் கலா் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த இந்துமதி, அதனை அருகிலுள்ள ஆசாரி கடையில் எடை பாா்க்கச் சென்ற போது வடமாநிலத்தவா்கள் தப்பி ஓடிவிட்டனராம். நகையை எடைபாா்த்தபோது எடை குறைவாக இருந்ததாம்.
இது தொடா்பாக விஜயநாராயணம் காவல்நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். காவல்நிலைய ஆய்வாளா் பிரேமா வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வடமாநிலத்தவா்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறாா்.