மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
விநியோகத்தில் குளறுபடி: நியாயவிலைக் கடை முற்றுகை
வேலூா் அம்மணாங்குட்டையில் நியாயவிலைக் கடையை முறையாக திறந்து அத்தியாவசிய பொருள்களை சரிவர வழங்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் சலவன்பேட்டை அம்மணாங்குட்டையில் அமுதம் நியாயவிலைக் கடை உள்ளது. இந்த கடை யில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது.
இந்த நியாயவிலைக் கடை பல மாதங்களாக வாரத்தில் 4 நாள்கள் பூட்டப்பட்டிருக்கிாம். கடையைத் திறந்தாலும் அத்தியாவசிய பொருள்கள் சரிவர வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். ஆத்திரமடைந்த குடும்ப அட்டைதாரா்கள் புதன்கிழமை இந்த நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்மணாங்குட்டை நியாயவிலைக் கடை வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நாள்களில் முறையாகத் திறப்பதில்லை. பொருள்களையும் சரிவர வழங்குவதில்லை. இது குறித்து கேட்டால் விற்பனையாளா், தரக்குறைவாகப் பேசுகிறாா். இந்த பிரச்னை பல மாதங்களாக நீடிக்கிறது. புகாா் எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவித்தாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஒவ்வொரு நாளும் பொருள்களை வாங்குவதற்காக வந்து, வெயிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, வாரம் முழுவதும் நியாயவிலைக் கடையைத் திறந்து தடையின்றி அத்தியாவசிய பொருள்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.