செய்திகள் :

விழுப்புரம்: வலது காலுக்குப் பதில் இடது காலில் அறுவை சிகிச்சை; மயக்கம் தெளிந்து அதிர்ச்சியான நோயாளி

post image

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகேயுள்ள விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து. இவருக்கு வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்த நிலையில் அதிக வலியால் அன்றாடம் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மாரிமுத்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளி
பாதிக்கப்பட்ட நோயாளி

அதனை ஏற்று மாரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நான்கு நாள்கள் மாரிமுத்துவிற்கு அறுவை சிகிச்சைக்கான முன் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிறகு மாரிமுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை செய்ய கால் முட்டியில் கத்தியால் கிழித்த போது வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யத் திறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யாமல் தையல் போட்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்காகச் செலுத்தப்பட்ட மயக்கம் தெளிந்து மாரிமுத்து மருத்துவர்களிடம், தனக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் ஏன் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு மருத்துவர் தவறுதலாக இடது காலில் சிகிச்சை செய்யத் திறந்துவிட்டதாகவும் அதன்பின்னர் அறுவை சிகிச்சை செய்யாமல் மூடிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தவறாகச் சிகிச்சை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, வலது காலில் ஜவ்வு கிழிந்ததற்கு அறுவை சிகிச்சை செய்யக் கிழித்தபோது இடது காலில் கிழிக்கப்பட்டது தெரிய வரவே சிகிச்சை செய்யாமல் தையல் போட்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வாறான மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ... மேலும் பார்க்க

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்த... மேலும் பார்க்க

``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' - திருமா விளக்கம்

கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மாணவர் பாராளுமன்றம்' என்னும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இதில் 'LGBTQ+' குறித்து மாணவர் ஒருவரி... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் க... மேலும் பார்க்க

காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ரயில் பெட்டிகளில் தங்கும் அறை வசதி... புது அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ரயில்வே துறை!

புதிய பாம்பன் பாலம்புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா... மேலும் பார்க்க