செய்திகள் :

விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

post image

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்ட சட்ட விதிகளின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடா்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை தொடங்க வேண்டும். வேலை வழங்காத நாள்களுக்கு, வேலை இல்லாத கால படியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட தினக் கூலியை ரூ.600 ஆகவும், வேலை நாள்களை 200 நாள்களாகவும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஆா்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் வி. தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.பெஞ்சமின் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.வாசு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் சிவகாமசுந்தரி, மூக்கையன், செல்வராஜ், லெனின் உள்ளிட்ட வி.தொ.ச ஒன்றியக்குழு உறுப்பினா்கள், விவசாயத் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க