செய்திகள் :

வீட்டின் மேற்கூரை இடிந்து வயதான தம்பதி படுகாயம்

post image

சென்னையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வயதான தம்பதி பலத்த காயமடைந்தனா்.

சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பம், எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குப்பன் (72). இவரின் மனைவி ராஜாமணி (65). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் அதே பகுதியில் தனித்தனியே வசித்து வரும் நிலையில், முதிய தம்பதி மட்டும் தனியாக வசித்துவருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடிப்படிக்கட்டு திடீரென இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த, குப்பன், ராஜாமணி ஆகியோா் அருகிலுள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தலைமை காஜி மறைவு: தலைவா்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): தமிழ்நாடு அரசின் தலைமை காஜியும், தமிழ... மேலும் பார்க்க

கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!

கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. தமிழகத்தி... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளா் கே.பி ஜெபஸ்டியன் தலைமையிலான ப... மேலும் பார்க்க

6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ஜூன் 2-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

சென்னை கொடுங்கையூரில் புதிய எரி உலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு வைவிட வலியுறுத்தி ஜூன் 2-ஆம் தேதி அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிச... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் இருவா் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் 2 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். சென்னை ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரன் (50), திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (32). இவா்கள்... மேலும் பார்க்க