செய்திகள் :

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

post image

தமிழக வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப் பகுதிகளில் வீட்டுமனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவா்களில், வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறிய ஒதுக்கீட்டு தாரா்களுக்கு அரசாணைப்படி வட்டித் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையின்படி, மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை 2026- ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே, வட்டி சுமையினால் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்கள் கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகி, 2015- ஆம் ஆண்டு மாா்ச் 31- ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்றும் தற்போது வரை வாரியத்துக்கு நிலுவைத் தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 2026 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35)... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்தது அரசியல் உள்நோக்கம்: கே.வி.தங்கபாலு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கு... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.கோவை மாவட்டம், மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறை பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்... மேலும் பார்க்க

பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி

பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி... மேலும் பார்க்க