செய்திகள் :

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

post image

போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 16607) கண்ணூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் பாலக்காடு - கோவை இடையே இயக்கப்படாது.

இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல்1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே இயக்கப்படாது.

கோவையில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721) பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு மதுரைக்குப் புறப்படும். இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது.

போத்தனூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) கோவையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்குச் செல்லும்.

இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, துடியலூா் அருகேயுள்ள தொப்பம்பட்டி அண்ணாமலை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35)... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்தது அரசியல் உள்நோக்கம்: கே.வி.தங்கபாலு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கு... மேலும் பார்க்க

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.கோவை மாவட்டம், மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறை பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

கோவை, க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்... மேலும் பார்க்க

பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா நன்றி

பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பருத்தி பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரி... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழக வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டப... மேலும் பார்க்க