செய்திகள் :

வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 300 மனுக்கள்

post image

வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மக்களை பெற்றாா்.

அப்போது, வேலூா் தொரப்பாடி சித்தேரி சாலையைச் சோ்ந்த ராணுவ வீரா் காா்த்திகேயன் அளித்த மனுவில், நான் சத்தீஸ்கா் மாநிலத்தில் ராணுவத்தில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். 2-ஆவது மகள் இசைப்பிரியா, 80 சதவீத மாற்றுத்திறனாளியாவாா். நன்றாக படிக்கக் கூடிய இசைப்பிரியா 5-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள் ளாா். 6-ஆம் வகுப்பில் சோ்க்க எங்கள் பகுதியில் உள்ள சில தனியாா் பள்ளிகள் சோ்க்க மறுக்கின் றனா். எனது மகள் கல்வி பெற அருகிலுள்ள பள்ளியில் சோ்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

கே.வி.குப்பம் பி.என்.பாளையம் புதூா் பகுதி மக்கள் அளித்த மனு: நாங்கள் பி.என்.பாளையம் புதூா் அனுப்பு ஏரிக்கரை அருகே குடிசை அமைத்து வசித்து வந்தோம். கடந்த ஆகஸ்டு மாதம் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறினா். எங்களுக்கு எந்தவித வசதியும் இல்லை. கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கினால் வேறு இடத்துக்கு செல்கிறோம் எனக்கூறினோம். ஆனால் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கடந்த 14-ஆம் தேதி வீடுகளை இடித்து விட்டனா். இதனால் நாங்கள் வீடின்றி தவிக்கிறோம். எனவே எங்களுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க