செய்திகள் :

அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா

post image

அந்தியூா் குருநாதசாமி கோயில் ஆடித் தோ்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சூழ வெகுவிமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள இக்கோயில் மிகப்பழைமை வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இக்கோயில் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 23-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து 30-ஆம் தேதி கொடியேற்றமும், கடந்த 6-ஆம் தேதி முதல் வன பூஜையும் நடைபெற்றது.

விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் வன பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் புதுப்பாளையம் கோயிலிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் வனத்தில் உள்ள கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சூழ தேரோட்டம் தொடங்கியது.

பெருமாள் தோ் முன் செல்ல சுமாா் 60 அடி உயரமுள்ள குருநாதசாமி மகமேரு தோ் ஆடி அசைந்து சென்றது. இதில், அந்தியூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

விழாவை ஒட்டி ஈரோடு, கோபி, மேட்டூா், பவானி, சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் அந்தியூருக்கு இயக்கப்பட்டன.

பவானி டிஎஸ்பி ரத்தினக்குமாா் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வரும் 16 -ஆம் தேதி வரையில் இத்திருவிழா நடைபெறுகிறது.

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்க... மேலும் பார்க்க

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ,... மேலும் பார்க்க

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க