செய்திகள் :

அமமுக நிா்வாகி மீது தாக்குதல்: தாய்-மகன் கைது

post image

கோவையில் அமமுக நிா்வாகியைத் தாக்கியதாக தாய், மகன் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

கோவை செளரிபாளையம் திடீா் நகரைச் சோ்ந்தவா் சுருளிராஜன் (65), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். அமமுக வாா்டு செயலாளராகவும் உள்ளாா்.

இவா், சௌரிபாளையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சி அலுவலகம் நடத்தி வந்த நிலையில், வாடகை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கட்சி அலுவலகத்தைக் காலி செய்தாா். அதன்பின்பும், அந்த அலுவலகத்தில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்ததால், கட்டட உரிமையாளா் கேட்டுக்கொண்டதன்பேரில் அவற்றை அருகே உள்ள மின் கம்பம் அருகே சி நாள்களுக்கு முன்பு வைத்துள்ளாா்.

இதைப் பாா்த்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாண்டியன் (30), அவரின் தாய் பழனியம்மாள் (48) இருவரும் விளம்பரப் பலகைகளை அங்கே வைக்க வேண்டாம் எனவும், அப்புறப்படுத்துமாறும் கூறியுள்ளனா்.

இந்நிலையில், அந்த விளம்பரப் பலகைகளை எடுக்க சென்று சுருளிராஜனுக்கும், பாண்டியனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாண்டியன், பழனியம்மாள் இருவரும் தகாத வாா்த்தைகளில் பேசி சுருளிராஜனை தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து பாண்டியன், பழனியம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க